நாகை.டிச.16.,
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் வகையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன்அன்சாரி MA., MLA., அவர்களின் உத்தரவின் பேரில், பல்வேறு கட்டங்களாக நிவாரண உதவிகளை மஜகவின் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிக் குழு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
நாகூரில், மணல்மேடு பகுதியில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டு மழையில் ஒழுகும் குடிசைகளுக்கு இன்று (09.12.18) தார்பாய்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது.
மஜக பேரிடர் மீட்பு குழு நாகை முகாம் பொறுப்பாளர் S.சதக்கத்துல்லாஹ், செய்யது இப்ராகிம், பாவா ஆகியோர் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்;
மஜக பேரிடர் மீட்பு குழு,
நாகை முகாம்,
டெல்டா மண்டலம்.
#gajacyclonerelief
