முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூக்கு கயிறாகும் 'ஸ்டெதாஸ்கோப்' ! மருத்துவ துறைக்கு அவசர சிகிச்சை அவசியம் தேவை..!

அறுவைச் சிகிச்சையின் மேற்கொள்ளும் பொழுதோ, விபத்தின் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு 'இரத்த தானம்' செய்வது அவசியமாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நமது இந்திய தேசத்தின் மொத்த இரத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும். ஒரு யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.

ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை உள்ளது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் 10 க்கும் அதிகமான நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது.  கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் 
இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம்.

சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருந்தாலும், அநேகர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வமைப்புகள் அவ்வப்போது இரத்தக்கொடை நிகழ்ச்சிகளை நடத்தும் போது இரத்த தானம் செய்கின்றனர்.

இரத்த தான முகாம்களிலிருந்து பெறப்படும் இரத்தங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் வீணாவதாகவும் குற்றம் சாட்டு நிலவுகிறது.

இந்தியாவில் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைகளுக்காக இரத்தம் பெறுவதற்கு ஏஜென்டுகளை நியமித்து அவர்கள் பணத்திற்காக இரத்தம் கொடுப்பவர் களிடமிருந்து நடைமுறைகளைப் பின்பற்றாமலும் இரத்தம் கொடுப்பவரின் கடைசியாக கொடுத்த தேதி, உடல் தகுதி போன்றவற்றையெல்லாம் பின்பற்றாமலும் இரத்தத்தை எடுத்து கொள்வதாகவும் குற்றச்சாட்டும் உண்டு.

தற்போது நடைப்பெற்றுள்ள முறையான சோதனை செய்யாமல் கர்பிணி பெண்ணுக்கு HIV  தொற்றுள்ள இரத்தத்தை செலுத்திய நிகழ்வானது இரத்த தானம் செய்பவர்கள் மத்தியிலும் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள் மத்தியிலும் ஒருவித அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இரத்தம் கொடுத்தவரே தமக்கு HIV இருப்பதை அறிந்து அது குறித்து வெளிப்படையாக பேசாதிருந்தால் எந்த தவறும் செய்யாத பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை இந்த சமூகம் சந்தேக கண் கொண்டு பார்த்திருக்கும்.

நம் குடும்பத்தினர், உறவினர்கள் என அறுவை சிகிச்சைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அதே துறையில் இருக்கும் சில நல்ல மருத்துவர்களால் மருந்துகள் மட்டுமே போதும் என பரிந்துரைக்கப்பட்டு குணமடைவதையும் நாம் காண்கிறோம்.

இந்நிலையில் தான் மருத்துவத் துறையில் வெளிப்படை தன்மை அவசியம் தேவை.  நாள்தோறும் பெருகி வரும் விசித்திர நோய்களும், இளவயது திடீர் மரணங்களும் பெருகி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் அறம் சார்ந்து தீமைக்கெதிராக அரசாங்கங்கள் மருத்துவ துறைக்கு அவசர சிகிச்சை அவசியம் மேற்கொள்ள தீவிரம் காட்ட வேண்டும்.

       -A.H.M. ஹமீது ஜெகபர் மரைக்கார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய ரமழானே வருக!

வன்முறையாளன்; வெள்ளை நிறவெறியன் ட்ரம்ப்!

முதலில் ஒரே ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வந்தன. பின்னர் இறந்தது நான்கு பேர் என்று தகவல்கள் வந்தன. கடைசியாக ஒரு போலீஸ்காரரும் இறந்திருக்கிறார். அவர் தலையில் Fire extinguisher எனப்படும் தீயணைப்பு சிலிண்டரை வைத்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் எனப்படும் கலகக்காரர்கள் என்ற செய்தி வெளிவந்து நம்மை நடுங்க வைத்தது. அமெரிக்காவின் நாடாளுமன்ற இன்வேஷனின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள்தான் இவை. முதலில் இந்த வீடியோக்களைப் பார்க்கையில் என்டர்டெயினிங்காகத்தான் இருந்தது. பின்னர்தான் உண்மை உறைக்கத் துவங்கியது. உலகின் பெரியண்ணன் அமெரிக்கா.. உலகின் அனைத்து அரசியல் நகர்வுகளும் அமெரிக்காவாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்க தலை நகரை விடுங்கள்.. அமெரிக்க நாடாளுமன்றம் அவ்வளவு பாதுகாப்பு மிகுந்தது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு மைல் முன்பாகவே நமக்கான தடைகள் துவங்கி விடும்.. எதேச்சையாக தெருவில்தான் கார்கள் ஏதும் இல்லையே.. தெருவில் இறங்கி இந்தப் பக்கம் இருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்.. போலீசார் ஓடி வந்துவிடுவார்கள். துப...

ஆடு தாண்டும் காவிரி (மேக்கேதாட்டூ) அணை அனையா நெருப்பு..!!

         கர்நாடக மாநிலம், ராம்நகர்  மாவட்டம், மேக்கேதாட்டு! இங்கு காவிரி ஆறு ஓடக்கூடிய இரு மலைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. ஆழம் மிகவும் அதிகம். மேக்கேதாட்டு என்றால் தமிழில் ஆடு தாண்டும் காவிரி என்று பொருள். இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட, கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வாறு அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளளவு 67.14 டி.எம்.சி-யாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அணையா?  நீர்த்தேக்கமா? : தமிழ்நாடு உள்ளிட்ட  கீழ்ப்பாசன மாநிலங்களிடமிருந்து அணை என்று சொன்னால் எதிர்ப்புகள் கிளம்பும், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும்  என்பதால் பெங்களூரு மற்றும் மாண்டியாவின் குடிநீர்த் தேவைக்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும் மேக்கேதாட்டுவில் நீர்த்தேக்கம் அமைக்கப்போவதாக சொன்னது கர்நாடகம். அன்றைய முதல்வராக இருந்த சித்தராமைய்யா, 2013-ம் ஆண்டு, ₹5912 கோடி திட்டமதிப்பீட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டு 12.11.2014 அன்று மத்திய சு...