முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழி தீர்க்க படுகிறாரா ரஞ்சன் கோகாய் ?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் ரஞ்சன் கோகாய். இவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46 வது தலைமை நீதிபதியாக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி பதவியேற்றார். இவரது தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982 ஆம் ஆண்டு அசாமின் முதலமைச்சராக இருந்தார். தங்களது சொத்து விவரங்களை வெளியிட்ட 11 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ரஞ்சன் கோகாய்யும் ஒருவர். அத்தோடு தனது சொத்து விவரங்களை தவறாமல் ரஞ்சன் புதுப்பித்து வருகிறார். அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தலைமை நீதிபதி மீது வைக்கப்பட்ட இந்த பாலியல் குற்றச்சாட்டு, நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ...