முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாகை மாவட்ட ஆட்சியரிடத்தில் மதுவிலக்கு கோரி மஜக மனு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் கடந்த அக்.14, திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.பிரவீன்.பி.நாயர்., இ.ஆ.ப அவர்களை சந்தித்து பூரண மதுவிலக்கு கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் பொது மக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மார்க் கடை குறித்து மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் கலந்து கொண்டார். உடன் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மஹ்மூது இபுராகிம், நாகூர் நகர செயலாளர் அபுசாலி சாஹிப், நாகூர் ஜாகிர் ஹூசைன், சாகுல் ஹமீது ஆகியோர் இருந்தனர்.

நாகூரில் பெரும் வரவேற்புக்கு மத்தியில் மது எதிர்ப்பு பரப்புரை!

உள்ளூர் மற்றும் வெளியூர் கூட்டத்தால் நிரம்பி வழிந்த புகழ் பெற்ற சுற்றுலா தளமான நாகூரில், இன்று மது எதிர்ப்பு பரப்புரையை அக்.11 அன்று பெரும் எழுச்சியோடு மஜக வினர் நடத்தியுள்ளனர். உறுதி மொழி ஏற்பு, ஆட்டோ பரப்புரை, துண்டு பிரசுர விநியோகம், வீதி சந்திப்புகள் என அனல் பறக்க இயங்கினர். நாகூர் தர்கா அலங்கார வாசலில்  பரப்புரையை உறுதி மொழி வாசித்து மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெரியக்கடை தெரு, கொத்தவால் சாவடி, மெயின்ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, பழைய பேரூந்து நிலையம், நெல்லுக்கடை தெரு, மீன் மார்கெட், தர்கா மார்கெட் லைன் என பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். முத்தாய்ப்பாக, நாகூர் காவல் நிலையம், நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் என அரசாங்க ஊழியர்களுக்கும், அங்கு வருகை தந்த பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பிரசுரங்களை பெற்று கொண்டவர்கள் அருகாமையில் புதுச்சேரி மாநில எல்லை உள்ளதால் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வழி தவறிபோ...