முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகூரில் பெரும் வரவேற்புக்கு மத்தியில் மது எதிர்ப்பு பரப்புரை!

உள்ளூர் மற்றும் வெளியூர் கூட்டத்தால் நிரம்பி வழிந்த புகழ் பெற்ற சுற்றுலா தளமான நாகூரில், இன்று மது எதிர்ப்பு பரப்புரையை அக்.11 அன்று பெரும் எழுச்சியோடு மஜக வினர் நடத்தியுள்ளனர்.

உறுதி மொழி ஏற்பு, ஆட்டோ பரப்புரை, துண்டு பிரசுர விநியோகம், வீதி சந்திப்புகள் என அனல் பறக்க இயங்கினர்.


நாகூர் தர்கா அலங்கார வாசலில்  பரப்புரையை உறுதி மொழி வாசித்து மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பெரியக்கடை தெரு, கொத்தவால் சாவடி, மெயின்ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, பழைய பேரூந்து நிலையம், நெல்லுக்கடை தெரு, மீன் மார்கெட், தர்கா மார்கெட் லைன் என பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

முத்தாய்ப்பாக, நாகூர் காவல் நிலையம், நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் என அரசாங்க ஊழியர்களுக்கும், அங்கு வருகை தந்த பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பிரசுரங்களை பெற்று கொண்டவர்கள் அருகாமையில் புதுச்சேரி மாநில எல்லை உள்ளதால் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வழி தவறிபோவதாக கூறி தொடர்ந்து இப்பரப்புரையை முன்னெடுக்க வேண்டி கோரிக்கை விடுத்தனர்.

கேரள, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்கள் வெள்ளி மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பெருமளவில் திரண்டிருந்தனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் மஜகவினரின் பிரச்சாரத்தை வெகுவாக ரசித்தனர்.

சிலர் கட்சி பெயர், கொடி குறித்து விசாரித்தனர். அவர்கள் தாய் மொழியில் பிரசுரங்கள் குறித்து எடுத்து சொன்னதும் கேட்டு பாராட்டிவிட்டு சென்றனர்.

நாகூர் நகர செயலாளர் B.அபுசாலி சாஹிப் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட பொருளாளர் S.சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது முன்னிலை வகிக்க Y.மஹ்மூது இபுராகிம், தம்ஜீதீன், மஞ்சை சதாம், M.K ஆஷிக் சாஹிப், P.அஷ்ரப் சாஹிப், A.ரஹீம், A.K செய்யது அலி, A.ரிஸ்வான், சாதிக், J.சாகுல் ஹமீது, யூசுப் இப்பரப்புரையில் பங்கேற்றனர்.

கடந்த அக்.02 முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மது எதிர்ப்பு பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய ரமழானே வருக!

வன்முறையாளன்; வெள்ளை நிறவெறியன் ட்ரம்ப்!

முதலில் ஒரே ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வந்தன. பின்னர் இறந்தது நான்கு பேர் என்று தகவல்கள் வந்தன. கடைசியாக ஒரு போலீஸ்காரரும் இறந்திருக்கிறார். அவர் தலையில் Fire extinguisher எனப்படும் தீயணைப்பு சிலிண்டரை வைத்து அடித்துக் கொன்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள் எனப்படும் கலகக்காரர்கள் என்ற செய்தி வெளிவந்து நம்மை நடுங்க வைத்தது. அமெரிக்காவின் நாடாளுமன்ற இன்வேஷனின்போது நிகழ்ந்த உயிரிழப்புகள்தான் இவை. முதலில் இந்த வீடியோக்களைப் பார்க்கையில் என்டர்டெயினிங்காகத்தான் இருந்தது. பின்னர்தான் உண்மை உறைக்கத் துவங்கியது. உலகின் பெரியண்ணன் அமெரிக்கா.. உலகின் அனைத்து அரசியல் நகர்வுகளும் அமெரிக்காவாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்க தலை நகரை விடுங்கள்.. அமெரிக்க நாடாளுமன்றம் அவ்வளவு பாதுகாப்பு மிகுந்தது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு மைல் முன்பாகவே நமக்கான தடைகள் துவங்கி விடும்.. எதேச்சையாக தெருவில்தான் கார்கள் ஏதும் இல்லையே.. தெருவில் இறங்கி இந்தப் பக்கம் இருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்.. போலீசார் ஓடி வந்துவிடுவார்கள். துப...

ஆடு தாண்டும் காவிரி (மேக்கேதாட்டூ) அணை அனையா நெருப்பு..!!

         கர்நாடக மாநிலம், ராம்நகர்  மாவட்டம், மேக்கேதாட்டு! இங்கு காவிரி ஆறு ஓடக்கூடிய இரு மலைகளுக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறைவு. ஆழம் மிகவும் அதிகம். மேக்கேதாட்டு என்றால் தமிழில் ஆடு தாண்டும் காவிரி என்று பொருள். இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட, கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். அவ்வாறு அணை கட்டப்பட்டால் அதன் கொள்ளளவு 67.14 டி.எம்.சி-யாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அணையா?  நீர்த்தேக்கமா? : தமிழ்நாடு உள்ளிட்ட  கீழ்ப்பாசன மாநிலங்களிடமிருந்து அணை என்று சொன்னால் எதிர்ப்புகள் கிளம்பும், அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும்  என்பதால் பெங்களூரு மற்றும் மாண்டியாவின் குடிநீர்த் தேவைக்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும் மேக்கேதாட்டுவில் நீர்த்தேக்கம் அமைக்கப்போவதாக சொன்னது கர்நாடகம். அன்றைய முதல்வராக இருந்த சித்தராமைய்யா, 2013-ம் ஆண்டு, ₹5912 கோடி திட்டமதிப்பீட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஆய்வுப் பணிகளுக்கு அனுமதி கேட்டு 12.11.2014 அன்று மத்திய சு...