அனைவருக்கும் பொதுவானவர் நபிகள் நாயகம்! (திருச்சியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேச்சு!)
நவ. 25, திருச்சி - தென்னூர் வட்டார ஜமாத்துல் உலமா நடத்திய மீலாது சமூக நல்லிணக்க விழாவில் , கலந்துக் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA உரையாற்றினார்.அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- "இந்த சமூக நல்லிணக்க விழாவை இனி திறந்த வெளியில் நடத்திட நீங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேடையில் பேசுபவர்களிலும், பார்வையாளர்களிலும் சரி பாதியாக சகோதர சமூகங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்குமாறு திட்டமிட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த வருடம் இது போன்ற ஒன்று கூடலை எல்லோரும் சேர்ந்து உழவர் சந்தை திடலில் நடத்திட வேண்டும் என என் ஆவலை தெரிவித்துக் கொள்கிறேன். மீலாது விழா என்பது குறித்த விவாதத்திற்குள் நாங்கள் செல்வதில்லை. அது இந்தியா போன்ற பன்மை கலாச்சார தேசங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புகளை எல்லோரிடமும் கொண்டு செல்ல இதுவும் ஒரு களம் என்று கருதுகிறோம். அதனால்தான் இதனை மீலாது சமூக நீதி விழா, மீலாது சமூக நல்லிணக்க பெருவிழா,சீரத்துன் நபி விழா என்ற பெயர்களில், எல்லா சமூக மக்களும் பங்கேற்கும் வக...