முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகல் கிழிப்பு போராட்டம்! தடையை மீறிய மஜகவினர் கைது!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிச.15 அன்று நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல்துறை கெடுபிடிகளை மீறி குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் முன்ஸி யூசுப்தீன், கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, சேக் அகமதுல்லாஹ், சபுருதீன், மு.மாவட்ட நிர்வாகி திருப்பூண்டி சாகுல் ஹமீது, மாவட்ட அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், சுல்தான், கீழையூர் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, நகர செயலாளர்கள் அஜீஜுர் ரஹ்மான், அபுசாலி சாஹிப், திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இபுராஹீம், ஷேக்பரீத், திருப்பூண்டி இப்ராஹீம், அஜீஸ், ஜாசிம், பொருள்வை ஜலால், மஞ்சை சதாம், வவ்வாலடி அன்சாரி, தோப்புத்துறை முபீன்,...