<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886</id><updated>2011-12-04T23:07:50.041-08:00</updated><title type='text'>Nagore.aHmH</title><subtitle type='html'>அஸ்ஸலாமு அலைக்கும்....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ahmh.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>9</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-8087075956261444924</id><published>2011-03-10T08:35:00.000-08:00</published><updated>2011-03-10T08:40:13.604-08:00</updated><title type='text'>ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் - அமெரிக்கா</title><content type='html'>ஈராக் அழிந்து&lt;br /&gt;&lt;br /&gt;சிதைந்த பிறகுதான்&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;பேரழிவு ஆயுதங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எவர் கையில்&lt;br /&gt;&lt;br /&gt;இருந்ததென்பது?&lt;br /&gt;&lt;br /&gt;~மு. மேத்தா&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-4SC4RBQ7glk/TXj-5yIKp8I/AAAAAAAAAEw/Npbfu_GaYdk/s1600/images.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="132" width="160" src="http://4.bp.blogspot.com/-4SC4RBQ7glk/TXj-5yIKp8I/AAAAAAAAAEw/Npbfu_GaYdk/s400/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-8087075956261444924?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/8087075956261444924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/8087075956261444924'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/03/blog-post_10.html' title='ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் - அமெரிக்கா'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4SC4RBQ7glk/TXj-5yIKp8I/AAAAAAAAAEw/Npbfu_GaYdk/s72-c/images.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-5379198297356173093</id><published>2011-03-03T07:12:00.001-08:00</published><updated>2011-03-04T06:17:21.302-08:00</updated><title type='text'>அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்</title><content type='html'>“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட  அற்புதம் திருக்குர்ஆன்” - நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி,  முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு  கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு  தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும்,  அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை  நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில்,  முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக  1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான்,  தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்திய  வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில்  முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத  மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது  என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி  கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு  சான்று பகர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து  இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை  உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த  ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”&lt;br /&gt;&lt;br /&gt;பிற  மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும்  நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து  வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில்  கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு  முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது  போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட  அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு  முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே  நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை  முஸ்லிம்கள் மேல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணற்ற அறிவியல் உண்மைகள்  திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல்,  கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என  கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து  கிடக்கின்றன. அவற்றுள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ் கடலில் அலை&lt;br /&gt;&lt;br /&gt;இரு கடல்களுக்கிடையே தடுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பித் தரும் வானம்&lt;br /&gt;&lt;br /&gt;பெருவெடிப்புக் கொள்கை&lt;br /&gt;&lt;br /&gt;முகடாக வானம்&lt;br /&gt;&lt;br /&gt;வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி&lt;br /&gt;&lt;br /&gt;விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்&lt;br /&gt;&lt;br /&gt;வானத்திலும் பயணம் செய்ய வழிகள்&lt;br /&gt;&lt;br /&gt;முளைகளாக மலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை&lt;br /&gt;&lt;br /&gt;பூமி உருண்டை&lt;br /&gt;&lt;br /&gt;பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்&lt;br /&gt;&lt;br /&gt;ஓரங்களில் குறைந்து வரும் பூமி&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்&lt;br /&gt;&lt;br /&gt;புவி ஈர்ப்பு சக்தி&lt;br /&gt;&lt;br /&gt;விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்&lt;br /&gt;&lt;br /&gt;கலப்பு விந்து&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்ப அறையின் தனித்தன்மை&lt;br /&gt;&lt;br /&gt;வேதனையை உணரும் நரம்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;தேன் உற்பத்தி&lt;br /&gt;&lt;br /&gt;இவையனைத்தையும்  விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி  முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத, அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு  அறிவியல் உண்மைகளை காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:&lt;br /&gt;&lt;br /&gt;அவன்  (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று  தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்து  விடாதீர்கள்!  (அல்குர்ஆன் 55:7-9)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_psRZfuJZE7c/SuJtWKtgFtI/AAAAAAAAAG4/fbXx-w87pPc/s1600-h/balance.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5395995531143026386" src="http://1.bp.blogspot.com/_psRZfuJZE7c/SuJtWKtgFtI/AAAAAAAAAG4/fbXx-w87pPc/s320/balance.jpg" style="cursor: pointer; display: block; height: 187px; margin: 0px auto 10px; text-align: center; width: 200px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட  வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு எடுத்தியம்புகின்றது.  முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற வசனம் 20 ஆம் நூற்றாண்டின்  அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக் கொள்கை”-யை கூறுகின்றது.  கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக  நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு நெருங்கிய நிலையிலேயே இருந்தது.  பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே வானமும், வானத்தில் உள்ள  பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக  எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்) அவர்களால், கண்டிப்பாக  இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக, இதனையெல்லாம் படைத்து, இயக்கும்  ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க முடியும் என்பது தெளிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக,  நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை உயர்த்தி, தராசை  நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை புரிந்து கொள்வதற்கு  முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight) இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம்  புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின் பொருண்மை என்பது அது தன்னகத்தே  கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது; எடை என்பது அப்பொருளின் மீது  செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின் அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன  சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு  இரும்புக்கட்டியையும் தராசின் இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி  வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும்,  இரும்பின் பொருண்மை, ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக்  காரணம். ஆனால், இதே தராசை பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச்  சென்று விண்வெளியில் பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும்.  பூமியில் வேலை செய்த தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில்,  நாம் தராசில் நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப்  புலனாகாத ஈர்ப்பு சக்தியை அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை  மூலம் பொருட்களின் சரியான எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான்  என்பது இதிலிருந்து விளங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்!  (அல்குர்ஆன் 21:32)&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின்  ஒரு நாள் கணக்குப்படி, தினமும் சுமார் 800 கோடி விண்கற்கள்  விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என அறிவியலாளர்கள்  கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும் பூமியானது மூன்றாவது  கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள் சூரியனைச் சுற்றி  வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு கோள்களும், கோடிக்கணக்கான  சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.  பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே  இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த சிறு கோள்களும்,  விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான விண்கற்களின்  அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட சிறிதான கூழாங்கல்  அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின் வேகமோ, விநாடிக்கு  ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு சற்றேறக்குறைய 30 கீ.மீ  வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது, சற்றே  பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு பூமியின் மீது  மோதுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_psRZfuJZE7c/SuJtfI01rVI/AAAAAAAAAHA/iSCKPgDT0Ow/s1600-h/meteorite2-300x84.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5395995685255753042" src="http://2.bp.blogspot.com/_psRZfuJZE7c/SuJtfI01rVI/AAAAAAAAAHA/iSCKPgDT0Ow/s400/meteorite2-300x84.jpg" style="cursor: pointer; display: block; height: 84px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக  எதிரெதிர் திசையில், விண்கல் பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்?  விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு மண்துகள் போன்ற விண்கல் பெற்று  விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று  விடும் சக்தியை பெற்று விடுவதாக கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச்  சுற்றி, காற்று மண்டலப் போர்வையை அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள்  புரிந்துள்ளான். கடுமையான வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள்  நுழையும் இந்த விண்கற்கள், காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக  சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி காற்று மண்டலத்தோடு கலந்து  விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை மூலம் நம்மையும், நாம் வாழும்  பூமியையும் காத்தருளி உள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் வழங்கிய அற்புதமான  திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய  முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை  அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா  அல்லாஹ்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-5379198297356173093?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/5379198297356173093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/5379198297356173093'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/03/blog-post_215.html' title='அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_psRZfuJZE7c/SuJtWKtgFtI/AAAAAAAAAG4/fbXx-w87pPc/s72-c/balance.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-8296868036199236184</id><published>2011-03-03T06:27:00.001-08:00</published><updated>2011-03-03T06:34:21.207-08:00</updated><title type='text'>கண்ணாடிக் கயிறு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="entry"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-e-Nq8oz_Pho/TW-m5JXU5eI/AAAAAAAAABo/wZPMlGl3hPQ/s1600/41399_100000442455887_522_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh4.googleusercontent.com/-e-Nq8oz_Pho/TW-m5JXU5eI/AAAAAAAAABo/wZPMlGl3hPQ/s1600/41399_100000442455887_522_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நம் நிலை  நன்றாயில்லை&lt;br /&gt;காரணம் – நாம்&lt;br /&gt;ஒன்றாயில்லை…&lt;br /&gt;பிறை மதி காண்பதிலும்&lt;br /&gt;குறைமதி நமக்கு..&lt;br /&gt;பிரிவதும், சரிவதும்&lt;br /&gt;தொடர்கதை எமக்கு..&lt;br /&gt;ஒரே இறை…&lt;br /&gt;எத்தனைக் கூட்டங்கள்…&lt;br /&gt;ஒரே மறை…&lt;br /&gt;எத்தனைக் குழப்பங்கள்…&lt;br /&gt;ஒரே பிறை&lt;br /&gt;எத்தனைப் பெருநாட்கள்…&lt;br /&gt;மார்க்கம் வலியுறுத்தும்&lt;br /&gt;பிரியம் தெரியவில்லை நமக்கு&lt;br /&gt;மார்க்கத்தை வைத்தே&lt;br /&gt;பிரியத் தெரிகிறது…&lt;br /&gt;நாம் செண்டுகளைப்&lt;br /&gt;பரிமாறும்&lt;br /&gt;பெருநாட்களில்&lt;br /&gt;ஏகாதிபத்தியம்&lt;br /&gt;குண்டுகளை வீசுகிறது…&lt;br /&gt;பாலஸ்தீனம்,&lt;br /&gt;ஆப்கானிஸ்தானம்&lt;br /&gt;எரியும் ஈராக்&lt;br /&gt;கருகும் காஷ்மீர்&lt;br /&gt;பாங்கோசை&lt;br /&gt;ஒலிக்கின்ற&lt;br /&gt;பூமியெங்கும்&lt;br /&gt;ரத்தம்…&lt;br /&gt;இருந்தும் திருந்தவில்லை&lt;br /&gt;இன்னும் நம் சித்தம்…&lt;br /&gt;வேத வார்த்தையை&lt;br /&gt;வாழ்க்கையாய் ஆக்கும்&lt;br /&gt;கடமை மறந்தோம்&lt;br /&gt;கொடுமை அடைந்தோம்…&lt;br /&gt;நம் நிலை&lt;br /&gt;நன்றாயில்லை&lt;br /&gt;காரணம் – நாம்&lt;br /&gt;ஒன்றாயில்லை…&lt;br /&gt;இறைவனின் கயிறை&lt;br /&gt;ஒன்றாகப் பற்றினாலே&lt;br /&gt;சமுதாய ஒற்றுமை&lt;br /&gt;உருவாகும்…&lt;br /&gt;நம்மில் சிலர்&lt;br /&gt;ஒற்றுமை என்னும் கயிறு&lt;br /&gt;திரித்தார்கள்…&lt;br /&gt;பிறகு&lt;br /&gt;ஒற்றுமையாய்&lt;br /&gt;இருப்பதில்லை&lt;br /&gt;என்பதில் மட்டுமே&lt;br /&gt;ஒற்றுமையாய்&lt;br /&gt;இருந்தார்கள்…&lt;br /&gt;ஒருவருக்கொருவர்&lt;br /&gt;நாம் கண்ணாடிகள்&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;எப்போதும் நமக்குள்&lt;br /&gt;கல்வீச்சுக்கள்…&lt;br /&gt;ஒவ்வொரு திசையிலும்&lt;br /&gt;சிதறினோம்&lt;br /&gt;காலமெல்லாம் நாம்&lt;br /&gt;கதறினோம்…&lt;br /&gt;இதயத் துணிகளை&lt;br /&gt;இணைத்துத் தைக்க&lt;br /&gt;பெருமானார்&lt;br /&gt;தந்து சென்றது&lt;br /&gt;வேத நூல்&lt;br /&gt;நம் கைகளிலோ&lt;br /&gt;இப்போது&lt;br /&gt;பிரிவினைக்&lt;br /&gt;கத்தரிக்கோல்&lt;br /&gt;சிறு சிறு துளிகள்&lt;br /&gt;நிலத்தில் மூழ்கும்&lt;br /&gt;பெரு வெள்ளத்தில்&lt;br /&gt;இந்த&lt;br /&gt;நிலமே மூழ்கும்&lt;br /&gt;வெள்ளம் என்பது&lt;br /&gt;நீரின் ஒற்றுமை…&lt;br /&gt;இருளிலும், காற்றிலும்&lt;br /&gt;ஒரு சுடர் நடுங்கும்&lt;br /&gt;சூரிய வருகையில்&lt;br /&gt;காரிருள் அடங்கும்&lt;br /&gt;சூரியப் பேரொளி&lt;br /&gt;ஒளியின் ஒற்றுமை…&lt;br /&gt;ஓலை விசிறி ஒன்று&lt;br /&gt;காற்றை&lt;br /&gt;உத்தரவு&lt;br /&gt;போட்டழைக்கும்&lt;br /&gt;ஓலப் புயல் அடித்தால்&lt;br /&gt;ஓங்கு பனைமரமும்&lt;br /&gt;பறக்கும்&lt;br /&gt;சூறைப் புயலோ&lt;br /&gt;காற்றின் ஒற்றுமை…&lt;br /&gt;காக்கும் கயிறைத்&lt;br /&gt;தூக்குக் கயிறாக்கியக்&lt;br /&gt;கண்ணாடிகளே…&lt;br /&gt;வேதரசம்&lt;br /&gt;பூசிக் கொள்ளுங்கள்&lt;br /&gt;சத்தியம் உங்களில்&lt;br /&gt;முகம் பார்க்கும்…&lt;br /&gt;துவேசக் கற்களை&lt;br /&gt;வீசிக் கொண்டால்&lt;br /&gt;உங்கள் சிதறல்களில்&lt;br /&gt;ஷைத்தானியம்&lt;br /&gt;முகம் காட்டும்.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;- பேரா. ஹாஜாகனி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-8296868036199236184?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/8296868036199236184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/8296868036199236184'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/03/blog-post_6574.html' title='கண்ணாடிக் கயிறு'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh4.googleusercontent.com/-e-Nq8oz_Pho/TW-m5JXU5eI/AAAAAAAAABo/wZPMlGl3hPQ/s72-c/41399_100000442455887_522_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-4484650535273664988</id><published>2011-03-03T06:22:00.000-08:00</published><updated>2011-03-03T06:36:58.495-08:00</updated><title type='text'>அயோத்தியத் தீர்ப்பு இரண்டாவது கரசேவை?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="entry"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-LmvVD_9-DGw/TW-ng6KoN_I/AAAAAAAAABw/Pmw_v6WsIck/s1600/41399_100000442455887_522_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh3.googleusercontent.com/-LmvVD_9-DGw/TW-ng6KoN_I/AAAAAAAAABw/Pmw_v6WsIck/s1600/41399_100000442455887_522_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அறுபதாண்டு கடந்து&lt;br /&gt;அறிவிக்கப்பட்டது&lt;br /&gt;‘அயோத்தியத் தீர்ப்பு’&lt;br /&gt;(சில எழுத்துக்களை&lt;br /&gt;மாற்றிப் படித்தாலும்&lt;br /&gt;தவறில்லை)&lt;br /&gt;நீதிமன்றத்தை&lt;br /&gt;அவமதிப்பது&lt;br /&gt;பெருங்குற்றம்&lt;br /&gt;நீதிமன்றம்&lt;br /&gt;நீதியை அவமதிப்பது…?&lt;br /&gt;சட்டம்&lt;br /&gt;ஆக்கப்பட்டது&lt;br /&gt;சடம்&lt;br /&gt;பிரிக்கப்பட்டது&lt;br /&gt;இடம்&lt;br /&gt;இனி&lt;br /&gt;சட்டம்&lt;br /&gt;எங்கே இருக்கும்&lt;br /&gt;ஆட்சியகத்திலா?&lt;br /&gt;அருங் காட்சியகத்திலா?&lt;br /&gt;இந்த&lt;br /&gt;கட்டப் பஞ்சாயத்தின்&lt;br /&gt;சட்டப் பஞ்சாயத்துகள்&lt;br /&gt;சதிராட்டம் பார்த்து&lt;br /&gt;கட்டப் பஞ்சாயத்துகள்&lt;br /&gt;கவுரவம் பெற்றன&lt;br /&gt;நல்லோர்களின்&lt;br /&gt;நம்பிக்கைகள்&lt;br /&gt;கருகக் கருக…&lt;br /&gt;இடித்துத் தள்ளப்பட்டன&lt;br /&gt;6.12.1992&lt;br /&gt;அன்று&lt;br /&gt;ஒரு மசூதி&lt;br /&gt;30.09.2010&lt;br /&gt;அன்று நீதி&lt;br /&gt;அது காவிகள் நடத்திய&lt;br /&gt;முதலாவது கரசேவை&lt;br /&gt;இது&lt;br /&gt;கறுப்புகள் நடத்திய&lt;br /&gt;இரண்டாவது கரசேவை!&lt;br /&gt;நீதிமான்களே&lt;br /&gt;ஒன்றாக இருக்கவே&lt;br /&gt;விரும்புகிறோம்&lt;br /&gt;மூன்றாகப்&lt;br /&gt;பிரித்து விடாதீர்கள்&lt;br /&gt;பதை பதைத்துப்&lt;br /&gt;படபடக்கிறது&lt;br /&gt;தேசியக் கொடி&lt;br /&gt;சட்டப்படி&lt;br /&gt;சில&lt;br /&gt;குற்றத்திற்கு&lt;br /&gt;மரண தண்டனை&lt;br /&gt;இப்போதெல்லாம்&lt;br /&gt;நடந்துவிட்ட&lt;br /&gt;குற்றப்படி&lt;br /&gt;சட்டத்திற்கே&lt;br /&gt;மரண தண்டனை&lt;br /&gt;தாமதிக்கப்பட்டபோதெ&lt;br /&gt;நீதி&lt;br /&gt;வஞ்சிக்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;இப்போது குற்றவாளிகளால்&lt;br /&gt;வரவேற்கப்பட்டுள்ளது&lt;br /&gt;நீதிமன்றங்கள்&lt;br /&gt;யாருக்காக?&lt;br /&gt;நூல்களை அறிந்தவர்களுக்கா?&lt;br /&gt;நூல்களை அணித்தவர்களுக்கா?&lt;br /&gt;ஆராய்ச்சி மணியை&lt;br /&gt;அடித்த,&lt;br /&gt;மாட்டுக்கும்&lt;br /&gt;நீதி தந்தானாம்&lt;br /&gt;மனுநீதி.&lt;br /&gt;இப்போதும்&lt;br /&gt;மணி அடிப்பவர்களுக்கே&lt;br /&gt;கிடைக்கிறது&lt;br /&gt;உயர்நீதி!!&lt;br /&gt;ஜென்ம பூமிகளை&lt;br /&gt;உறுதி செய்கிற&lt;br /&gt;ஜென்மங்களின்&lt;br /&gt;பூமி இது..&lt;br /&gt;நீதி அநீதி&lt;br /&gt;இங்கு&lt;br /&gt;யாவும் பொது&lt;br /&gt;வாய்மைக்கல்ல&lt;br /&gt;மிரட்டுகிற&lt;br /&gt;வலிமைக்கே&lt;br /&gt;எல்லாம்&lt;br /&gt;பாபரி மஸ்ஜித் நிலம்&lt;br /&gt;என்ற&lt;br /&gt;எளியோரின் அப்பம்&lt;br /&gt;பங்கு வைக்கப்பட்டுள்ளது..&lt;br /&gt;வானரம் ஆயிரமாய்&lt;br /&gt;வரவேற்றுத் தாவுகி்ன்றன..&lt;br /&gt;இது தேசத்தின்&lt;br /&gt;மனசாட்சிக்கு&lt;br /&gt;வைக்கப்பட்ட&lt;br /&gt;அக்கினிப் பரீட்சை&lt;br /&gt;மிக்க&lt;br /&gt;மேலானவனிடம்&lt;br /&gt;செய்வோம்&lt;br /&gt;மேல் முறையீடு&lt;br /&gt;பொறுமை காப்போம்&lt;br /&gt;பொறுமையாளர்களோடு&lt;br /&gt;இருக்கும்&lt;br /&gt;அதிபதி&lt;br /&gt;அவனல்லவா&lt;br /&gt;இறுதி&lt;br /&gt;நீதிபதி!&lt;br /&gt;- ஹாஜா கனி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-4484650535273664988?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/4484650535273664988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/4484650535273664988'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/03/blog-post_6027.html' title='அயோத்தியத் தீர்ப்பு இரண்டாவது கரசேவை?'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-LmvVD_9-DGw/TW-ng6KoN_I/AAAAAAAAABw/Pmw_v6WsIck/s72-c/41399_100000442455887_522_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-1254266352228949962</id><published>2011-03-03T06:18:00.000-08:00</published><updated>2011-03-03T06:35:41.196-08:00</updated><title type='text'>பந்தங்களை அணைப்பீர்..!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="entry"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-1sWNceuK_9o/TW-nNeHmliI/AAAAAAAAABs/Bvrgy4zEe7k/s1600/41399_100000442455887_522_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh3.googleusercontent.com/-1sWNceuK_9o/TW-nNeHmliI/AAAAAAAAABs/Bvrgy4zEe7k/s1600/41399_100000442455887_522_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அலைகள்&lt;br /&gt;என்ன பேசக்கூடும்…&lt;br /&gt;கடல் கடந்த&lt;br /&gt;கணவனின்&lt;br /&gt;கவலை ஓரலை…&lt;br /&gt;துணை பிரிந்த&lt;br /&gt;மனைவியின்&lt;br /&gt;துயரம் ஒரு&lt;br /&gt;பேரலை…&lt;br /&gt;பலரின்&lt;br /&gt;வாழ்வுக் கடலில்&lt;br /&gt;இந்த அலைகள்&lt;br /&gt;ஓய்வதே இல்லை…&lt;br /&gt;இளமைக் கற்பூரம்…&lt;br /&gt;அதில் எரிவதோ&lt;br /&gt;வறுமை நெருப்பு…&lt;br /&gt;முன்னதாய்&lt;br /&gt;முடிந்த&lt;br /&gt;சகோதரிகளின்&lt;br /&gt;திருமணம்……&lt;br /&gt;பின்னர் நடந்த&lt;br /&gt;சடங்குச் சுரண்டல்கள்…&lt;br /&gt;இளமையின் விளிம்பில்&lt;br /&gt;இவனது திருமணம்&lt;br /&gt;எல்லாம்&lt;br /&gt;கடனைக் கடலாக்க…&lt;br /&gt;கடல் தாண்ட வேண்டிய&lt;br /&gt;நிர்ப்பந்தம்…&lt;br /&gt;பாலைநிலத் தீக்கொடுமை&lt;br /&gt;அங்கே தன்&lt;br /&gt;மழலைச் சொல்&lt;br /&gt;கேட்டறியா மாக்கொடுமை&lt;br /&gt;பிள்ளை சுமக்கும்&lt;br /&gt;கைகளில்&lt;br /&gt;கல்லைச் சுமக்கும்&lt;br /&gt;கட்டட வேலை…&lt;br /&gt;இருபது நாள் விடுமுறையில்&lt;br /&gt;இரண்டாண்டை வாழ்வது…&lt;br /&gt;பல்லாயிரம் பேர் வாங்கிய&lt;br /&gt;வரமா? சாபமா?&lt;br /&gt;விசா பறவைகளே…!&lt;br /&gt;உங்களுக்கு&lt;br /&gt;வீடு என்ன&lt;br /&gt;வேடந்தாங்கலா…?&lt;br /&gt;ஆடம்பரத் திருமணங்கள்…&lt;br /&gt;வரவுக்கு மீறிய வாழ்க்கை…&lt;br /&gt;முடங்க வைக்கும் சடங்குகள்…&lt;br /&gt;இவையாவும்…&lt;br /&gt;உங்கள்&lt;br /&gt;வாழ்வை எரிக்கும்&lt;br /&gt;தீப்பந்தங்கள்…&lt;br /&gt;உங்களை&lt;br /&gt;நித்தியக் கைதியாக்கும்&lt;br /&gt;நிர்ப்பந்தங்கள்…&lt;br /&gt;மனதைக் கடலாக்கும்&lt;br /&gt;மார்க்கம் தேடுங்கள்…&lt;br /&gt;பந்தங்களை அங்கே&lt;br /&gt;அணையுங்கள்…&lt;br /&gt;வாழ்க்கையில்…!&lt;br /&gt;எல்லாம் சம்பாதிக்கிறீர்கள்&lt;br /&gt;வாழ்க்கையை…?&lt;br /&gt;எப்போது சம்பாதிப்பீர்கள்&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;- ஹாஜாகனி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-1254266352228949962?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/1254266352228949962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/1254266352228949962'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/03/blog-post_03.html' title='பந்தங்களை அணைப்பீர்..!'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-1sWNceuK_9o/TW-nNeHmliI/AAAAAAAAABs/Bvrgy4zEe7k/s72-c/41399_100000442455887_522_n.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-8424873958407445896</id><published>2011-03-01T08:58:00.000-08:00</published><updated>2011-03-01T08:59:25.440-08:00</updated><title type='text'>வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.&lt;br /&gt;தன்னுடைய  அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக்  கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து  மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த  புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?&lt;br /&gt;பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;அது எப்படி சாத்தியமாயிற்று?&lt;br /&gt;&lt;br /&gt;புனேயில்  உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன  காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுஆம் அவளது அறையில் உள்ள  வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.&lt;br /&gt;செய்வதையெல்லாம்  செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த  வெப்கேமிரா. ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின்  அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீடியாத்துறையில்  பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர்  மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து  டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில்  ட்ரோஜன்என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது&lt;br /&gt;அந்த ட்ரோஜன்  என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள  வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை  ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.  உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும்  திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்  தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன்  செய்தே வைத்திருக்கின்றாள். இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே  இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி  இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள்  சாதாரணமாய் இருந்துவிடமுடியாது.&lt;br /&gt;புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.&lt;br /&gt;கொஞ்ச  நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை  துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின்  பார்வைக்கு வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;'தங்களது அறையினில் வெப்கேமிராவை  வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின்  பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும்  வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை  தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள்  விழிப்புணர்வு அடைவார்கள்'-&lt;br /&gt;&lt;br /&gt;ரோகஸ் நாக்பால், ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா&lt;br /&gt;&lt;br /&gt;'தேவையில்லாமல்  வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள்  இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும்  ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட  பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல்  இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'-&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில்  இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது  ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ்  நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ்  புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல  தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற  மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள். ஆகவே நண்பர்களே கணிப்பொறி  உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க  விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும்  துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை  சரிபார்த்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் உலவும்பொழுது மட்டும்  இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை  கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும்  அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில்  அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால்  உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.  அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட  இருக்கலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-8424873958407445896?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/8424873958407445896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/8424873958407445896'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/03/blog-post.html' title='வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-72885455159391140</id><published>2011-02-24T07:37:00.000-08:00</published><updated>2011-02-24T07:38:25.346-08:00</updated><title type='text'>தமிழ்நாட்டுப் பழமொழிகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அ&lt;br /&gt;அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.&lt;br /&gt;அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.&lt;br /&gt;அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.&lt;br /&gt;அசையாத மணி அடிக்காது&lt;br /&gt;அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.&lt;br /&gt;அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.&lt;br /&gt;அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.&lt;br /&gt;அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.&lt;br /&gt;அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.&lt;br /&gt;அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.&lt;br /&gt;அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.&lt;br /&gt;அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.&lt;br /&gt;அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.&lt;br /&gt;அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.&lt;br /&gt;அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.&lt;br /&gt;அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.&lt;br /&gt;அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.&lt;br /&gt;அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.&lt;br /&gt;அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.&lt;br /&gt;அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.&lt;br /&gt;அன்பே கடவுள்.&lt;br /&gt;அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.&lt;br /&gt;அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.&lt;br /&gt;அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.&lt;br /&gt;அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.&lt;br /&gt;அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!&lt;br /&gt;அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.&lt;br /&gt;அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.&lt;br /&gt;அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.&lt;br /&gt;அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.&lt;br /&gt;அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.&lt;br /&gt;அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.&lt;br /&gt;அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.&lt;br /&gt;அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.&lt;br /&gt;அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.&lt;br /&gt;அதிக ஓய்வு அதிக வேதனை.&lt;br /&gt;அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?&lt;br /&gt;அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.&lt;br /&gt;அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.&lt;br /&gt;அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.&lt;br /&gt;அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.&lt;br /&gt;அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.&lt;br /&gt;அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.&lt;br /&gt;அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.&lt;br /&gt;அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.&lt;br /&gt;அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.&lt;br /&gt;அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?&lt;br /&gt;அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.&lt;br /&gt;அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.&lt;br /&gt;அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.&lt;br /&gt;அரசனும் அன்னைக்கு மகனே.&lt;br /&gt;அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.&lt;br /&gt;அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.&lt;br /&gt;அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்&lt;br /&gt;அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!&lt;br /&gt;அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.&lt;br /&gt;அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.&lt;br /&gt;அவனன்றி ஓர் அணுவும் அசையாது.&lt;br /&gt;அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.&lt;br /&gt;ஆ&lt;br /&gt;&lt;br /&gt;ஆடிப்பட்டம் தேடி விதை.&lt;br /&gt;ஆழம் தெரியாமல் காலை விடாதே!&lt;br /&gt;ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!&lt;br /&gt;ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.&lt;br /&gt;ஆயுள் நீடிக்க உணவைக் குறை.&lt;br /&gt;ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.&lt;br /&gt;ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.&lt;br /&gt;ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.&lt;br /&gt;ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.&lt;br /&gt;ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.&lt;br /&gt;ஆறுவது சினம்.&lt;br /&gt;ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.&lt;br /&gt;ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.&lt;br /&gt;ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.&lt;br /&gt;ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.&lt;br /&gt;ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?&lt;br /&gt;ஆலயம் தொழுவது சாலவும் நன்று.&lt;br /&gt;ஆலை விழுது தாங்கியது போல.&lt;br /&gt;ஆடு பகை குட்டி உறவா?&lt;br /&gt;ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.&lt;br /&gt;ஆடி ஓய்ந்த பம்பரம் போல.&lt;br /&gt;ஆரம்பத்தில் சூரத்துவம்.&lt;br /&gt;ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.&lt;br /&gt;ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.&lt;br /&gt;ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.&lt;br /&gt;ஆற்றுநீர் பித்தம் போக்கும்&lt;br /&gt;குளத்து நீர் வாதம் போக்கும்&lt;br /&gt;சோற்றுநீர் எல்லாம் போக்கும்&lt;br /&gt;ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.&lt;br /&gt;இ&lt;br /&gt;&lt;br /&gt;இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.&lt;br /&gt;இளமையில் கல்.&lt;br /&gt;இளங்கன்று பயமறியாது.&lt;br /&gt;இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.&lt;br /&gt;இளமையில் கல். முதுமையில் காக்கும்.&lt;br /&gt;இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.&lt;br /&gt;இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.&lt;br /&gt;இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.&lt;br /&gt;இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.&lt;br /&gt;இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.&lt;br /&gt;இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.&lt;br /&gt;இறங்கு பொழுதில் மருந்து குடி.&lt;br /&gt;இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.&lt;br /&gt;இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.&lt;br /&gt;இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?&lt;br /&gt;இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.&lt;br /&gt;இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.&lt;br /&gt;இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.&lt;br /&gt;இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.&lt;br /&gt;இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.&lt;br /&gt;இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.&lt;br /&gt;இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.&lt;br /&gt;இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.&lt;br /&gt;இடுக்கன் வருங்கால் நகுக.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.&lt;br /&gt;&lt;br /&gt;ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.&lt;br /&gt;ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.&lt;br /&gt;ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.&lt;br /&gt;ஈட்டி எட்டிய வரையில் பாயும்.&lt;br /&gt;ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.&lt;br /&gt;உ&lt;br /&gt;&lt;br /&gt;உழுத நிலத்தில் பயிரிடு.&lt;br /&gt;உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.&lt;br /&gt;உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.&lt;br /&gt;உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.&lt;br /&gt;உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.&lt;br /&gt;உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.&lt;br /&gt;உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.&lt;br /&gt;உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.&lt;br /&gt;உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.&lt;br /&gt;உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.&lt;br /&gt;உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.&lt;br /&gt;உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.&lt;br /&gt;உழைத்து உண்பதே உணவு.&lt;br /&gt;உப்பிட்டவரை உள்ளவும் நினை.&lt;br /&gt;உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு&lt;br /&gt;ஊ&lt;br /&gt;&lt;br /&gt;ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.&lt;br /&gt;ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.&lt;br /&gt;ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.&lt;br /&gt;ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.&lt;br /&gt;ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.&lt;br /&gt;ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.&lt;br /&gt;எ&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிரே வந்த நாயை அடிச்சானாம்.&lt;br /&gt;எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.&lt;br /&gt;எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.&lt;br /&gt;எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.&lt;br /&gt;எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.&lt;br /&gt;எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.&lt;br /&gt;எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.&lt;br /&gt;எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.&lt;br /&gt;எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.&lt;br /&gt;எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.&lt;br /&gt;எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?&lt;br /&gt;எண்ணம்போல் வாழ்வு.&lt;br /&gt;எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?&lt;br /&gt;ஏ&lt;br /&gt;&lt;br /&gt;ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.&lt;br /&gt;ஏழை சொல் அம்பலம் ஏறாது.&lt;br /&gt;ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.&lt;br /&gt;ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.&lt;br /&gt;ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!&lt;br /&gt;ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.&lt;br /&gt;ஐ&lt;br /&gt;&lt;br /&gt;ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.&lt;br /&gt;ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?&lt;br /&gt;ஒ&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.&lt;br /&gt;ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.&lt;br /&gt;ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.&lt;br /&gt;ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.&lt;br /&gt;ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.&lt;br /&gt;ஒரு கை தட்டினால் ஓசை எழாது.&lt;br /&gt;ஒழுக்கம் விழுப்பம் தரும்.&lt;br /&gt;ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.&lt;br /&gt;ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.&lt;br /&gt;ஒத்தடம் அரை வைத்தியம்.&lt;br /&gt;ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.&lt;br /&gt;ஒருவர் பொறுமை இருவர் நட்பு.&lt;br /&gt;ஓ&lt;br /&gt;&lt;br /&gt;ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.&lt;br /&gt;ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.&lt;br /&gt;ஓடிப் பழகிய கால் நிற்காது.&lt;br /&gt;ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.&lt;br /&gt;க&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்கு இமை பகையா?&lt;br /&gt;கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.&lt;br /&gt;கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.&lt;br /&gt;கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?&lt;br /&gt;கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.&lt;br /&gt;கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.&lt;br /&gt;பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.&lt;br /&gt;கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.&lt;br /&gt;கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.&lt;br /&gt;கடுங்காற்று மழைக்கூட்டும்.&lt;br /&gt;கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.&lt;br /&gt;கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.&lt;br /&gt;கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.&lt;br /&gt;கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.&lt;br /&gt;கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.&lt;br /&gt;கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.&lt;br /&gt;கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.&lt;br /&gt;கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.&lt;br /&gt;கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.&lt;br /&gt;கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?&lt;br /&gt;கல்வி விரும்பு.&lt;br /&gt;கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.&lt;br /&gt;கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?&lt;br /&gt;கணக்கு எழுதாதன் நிலைமை.&lt;br /&gt;கழுதை புரண்ட இடம் மாதிரி.&lt;br /&gt;கந்தையானாலும் கசக்கிக் கட்டு.&lt;br /&gt;கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.&lt;br /&gt;கடலில் கரைத்த பெருங்காயம் போல.&lt;br /&gt;கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.&lt;br /&gt;கடல் திடலாகும்; திடல் கடலாகும்.&lt;br /&gt;கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?&lt;br /&gt;கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.&lt;br /&gt;கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.&lt;br /&gt;கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;கா&lt;br /&gt;&lt;br /&gt;காலம் போகும் வார்த்தை நிற்கும்.&lt;br /&gt;கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.&lt;br /&gt;கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?&lt;br /&gt;கார்த்திகை கன மழை.&lt;br /&gt;கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.&lt;br /&gt;கார்த்திகை கண்டு களம் இடு.&lt;br /&gt;கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.&lt;br /&gt;காணிச் சோம்பல் கோடி நட்டம்.&lt;br /&gt;காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.&lt;br /&gt;காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.&lt;br /&gt;காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.&lt;br /&gt;காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.&lt;br /&gt;காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.&lt;br /&gt;காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.&lt;br /&gt;காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?&lt;br /&gt;காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.&lt;br /&gt;கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.&lt;br /&gt;கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை&lt;br /&gt;கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.&lt;br /&gt;கார்த்திகை கால் கோடை.&lt;br /&gt;கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.&lt;br /&gt;கி&lt;br /&gt;&lt;br /&gt;கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.&lt;br /&gt;கிட்டப் போயின் முட்டப் பகை.&lt;br /&gt;கிட்டாதாயின் வெட்டென மற.&lt;br /&gt;கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.&lt;br /&gt;கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.&lt;br /&gt;கீ&lt;br /&gt;&lt;br /&gt;கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி&lt;br /&gt;கு&lt;br /&gt;&lt;br /&gt;குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.&lt;br /&gt;குருடனுக்கு ஒரே மதி.&lt;br /&gt;குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.&lt;br /&gt;குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.&lt;br /&gt;குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.&lt;br /&gt;குதிரையும் கழுதையும் ஒன்றா?&lt;br /&gt;குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.&lt;br /&gt;குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.&lt;br /&gt;குடி குடியைக் கெடுக்கும்.&lt;br /&gt;குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.&lt;br /&gt;குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.&lt;br /&gt;குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.&lt;br /&gt;கூ&lt;br /&gt;&lt;br /&gt;கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.&lt;br /&gt;கூழானாலும் குளித்துக் குடி.&lt;br /&gt;கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.&lt;br /&gt;கூலிப் படை வெட்டுமா?&lt;br /&gt;கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.&lt;br /&gt;கெ&lt;br /&gt;&lt;br /&gt;கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை&lt;br /&gt;கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?&lt;br /&gt;கெடுவான் கேடு நினைப்பான்.&lt;br /&gt;கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.&lt;br /&gt;கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.&lt;br /&gt;கை&lt;br /&gt;&lt;br /&gt;கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.&lt;br /&gt;கை பட்டால் கண்ணாடி.&lt;br /&gt;கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.&lt;br /&gt;கொ&lt;br /&gt;&lt;br /&gt;கொடிக்கு காய் பாரமா?&lt;br /&gt;கொடாக் கண்டன் விடாக் கண்டன்.&lt;br /&gt;கோ&lt;br /&gt;&lt;br /&gt;கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.&lt;br /&gt;கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.&lt;br /&gt;கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.&lt;br /&gt;கோமளவல்லிக்கு ஒரு மொழி&lt;br /&gt;கோளாறுகாரிக்குப் பல மொழி&lt;br /&gt;கோபத்திற்குக் கண்ணில்லை.&lt;br /&gt;கௌ&lt;br /&gt;&lt;br /&gt;கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ச&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை&lt;br /&gt;சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.&lt;br /&gt;சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி&lt;br /&gt;சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சா&lt;br /&gt;&lt;br /&gt;சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;சி&lt;br /&gt;&lt;br /&gt;சிறுதுளி பெருவெள்ளம்.&lt;br /&gt;சிறு புண்ணையும், ஏழை உறவினனையும் அலட்சியம் செய்யாதே.&lt;br /&gt;சிறு துரும்பும் பல்குத்த உதவும்.&lt;br /&gt;சித்திரை எள்ளைச்சிதறி விதை.&lt;br /&gt;சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை&lt;br /&gt;பங்குனி என்றால் பருப்பதும் இல்லை&lt;br /&gt;வைகாசி என்றால் வளர்வதும் இல்லை&lt;br /&gt;சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.&lt;br /&gt;சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.&lt;br /&gt;சித்திரை மழை செல்ல மழை.&lt;br /&gt;சீ&lt;br /&gt;&lt;br /&gt;சீரைத் தேடின் ஏரைத்தேடு&lt;br /&gt;&lt;br /&gt;சு&lt;br /&gt;&lt;br /&gt;சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?&lt;br /&gt;சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!&lt;br /&gt;சுக்கைப் போல மருந்தில்லை.&lt;br /&gt;சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.&lt;br /&gt;சுத்தம் சோறு போடும்.&lt;br /&gt;சுற்றம் சூழ வாழ்&lt;br /&gt;சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.&lt;br /&gt;சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.&lt;br /&gt;சூ&lt;br /&gt;&lt;br /&gt;சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.&lt;br /&gt;சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.&lt;br /&gt;சூதும் வாதும் வேதனை செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;செ&lt;br /&gt;&lt;br /&gt;செயல்தான் மிகச்சுருக்கமான பதில்&lt;br /&gt;செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.&lt;br /&gt;செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;சே&lt;br /&gt;&lt;br /&gt;சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.&lt;br /&gt;சேற்றில் முளைத்த செந்தாமரை&lt;br /&gt;&lt;br /&gt;சோ&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.&lt;br /&gt;சோம்பித் திரியேல.&lt;br /&gt;சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?&lt;br /&gt;த&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை கண்டது யாரு?&lt;br /&gt;தண்ணீரே உணவுகளின் அரசன்.&lt;br /&gt;தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!&lt;br /&gt;பெண்ணிற்குச் சோதனை தங்கம்!&lt;br /&gt;மனிதனுக்கச் சோதனை பெண்!&lt;br /&gt;தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை&lt;br /&gt;தண்ணீரில் அடி பிடிக்கிறது.&lt;br /&gt;தலை பகை, வால் உறவா?&lt;br /&gt;தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.&lt;br /&gt;தலைக்குத் தலை பெரிய தனம்.&lt;br /&gt;தன் தப்பு பிறருக்குச் சத்து&lt;br /&gt;தன் உயிர்போல் மண் உயிர் நினை.&lt;br /&gt;தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.&lt;br /&gt;தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.&lt;br /&gt;தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.&lt;br /&gt;தன் கையே தனக்கு உதவி.&lt;br /&gt;தர்மம் தலை காக்கும்.&lt;br /&gt;தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.&lt;br /&gt;தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.&lt;br /&gt;தா&lt;br /&gt;&lt;br /&gt;தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.&lt;br /&gt;தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.&lt;br /&gt;தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.&lt;br /&gt;தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.&lt;br /&gt;தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.&lt;br /&gt;தானே தவறி விழுபவன் அழுவதில்லை.&lt;br /&gt;தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.&lt;br /&gt;தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.&lt;br /&gt;தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.&lt;br /&gt;தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.&lt;br /&gt;தி&lt;br /&gt;&lt;br /&gt;திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.&lt;br /&gt;திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.&lt;br /&gt;தீ&lt;br /&gt;&lt;br /&gt;தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.&lt;br /&gt;தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.&lt;br /&gt;து&lt;br /&gt;&lt;br /&gt;துறவிக்கு வேந்தன் துரும்பு.&lt;br /&gt;தும்பி பறந்தால் தூரத்தில் மழை.&lt;br /&gt;துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.&lt;br /&gt;தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?&lt;br /&gt;துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.&lt;br /&gt;துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.&lt;br /&gt;தூ&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.&lt;br /&gt;தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.&lt;br /&gt;தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.&lt;br /&gt;தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.&lt;br /&gt;தூங்காதவனே நீங்காதவன்.&lt;br /&gt;தூரமிருந்தால் சேர உறவு.&lt;br /&gt;&lt;br /&gt;தெ&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.&lt;br /&gt;தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.&lt;br /&gt;தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.&lt;br /&gt;தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.&lt;br /&gt;தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?&lt;br /&gt;தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தை&lt;br /&gt;&lt;br /&gt;தையல் சொல் கேளேல்.&lt;br /&gt;தை பிறந்தால் வழி பிறக்கும்.&lt;br /&gt;தொ&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.&lt;br /&gt;ப&lt;br /&gt;&lt;br /&gt;பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.&lt;br /&gt;பணம் பத்தும் செய்யும்.&lt;br /&gt;பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.&lt;br /&gt;பணம் உள்ளவனுக்கு அச்சம்;&lt;br /&gt;பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.&lt;br /&gt;பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.&lt;br /&gt;பசித்துப் புசி, வியர்த்துக் குளி.&lt;br /&gt;பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.&lt;br /&gt;பல் போனால் சொல் போச்சு.&lt;br /&gt;பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.&lt;br /&gt;பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.&lt;br /&gt;பங்குனி மாதம் பதர் கொள்.&lt;br /&gt;பங்குனி மாதம் பந்தலைத் தேடு.&lt;br /&gt;பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.&lt;br /&gt;படுக்க படுக்க பாயும் பகை.&lt;br /&gt;பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.&lt;br /&gt;பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.&lt;br /&gt;பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.&lt;br /&gt;பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.&lt;br /&gt;பணம் பாதாளம் வரை பாயும்.&lt;br /&gt;பா&lt;br /&gt;&lt;br /&gt;பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.&lt;br /&gt;பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!&lt;br /&gt;பி&lt;br /&gt;&lt;br /&gt;பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!&lt;br /&gt;பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.&lt;br /&gt;பிச்சை புகினும் கற்கை நன்றே!&lt;br /&gt;பிணியற்ற வாழ்வே பேரின்பம்.&lt;br /&gt;பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.&lt;br /&gt;பு&lt;br /&gt;&lt;br /&gt;புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?&lt;br /&gt;புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.&lt;br /&gt;புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.&lt;br /&gt;புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்&lt;br /&gt;சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்&lt;br /&gt;யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!&lt;br /&gt;புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.&lt;br /&gt;புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;&lt;br /&gt;முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.&lt;br /&gt;பூ&lt;br /&gt;&lt;br /&gt;பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.&lt;br /&gt;பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.&lt;br /&gt;பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?&lt;br /&gt;பூ விற்ற கடையில் புல் விற்கவும்;&lt;br /&gt;பெ&lt;br /&gt;&lt;br /&gt;பெண் கையில் கொடுத்த பணம் தங்காது&lt;br /&gt;ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.&lt;br /&gt;பெண் என்றால் பேயும் இரங்கும்.&lt;br /&gt;பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.&lt;br /&gt;பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.&lt;br /&gt;சுவருக்கு மண்ணிட்டுப் பார்&lt;br /&gt;பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.&lt;br /&gt;பொ&lt;br /&gt;&lt;br /&gt;பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,&lt;br /&gt;பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.&lt;br /&gt;பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;&lt;br /&gt;அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;&lt;br /&gt;பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.&lt;br /&gt;பொறுமை கடலினும் பெரிது.&lt;br /&gt;பொறுத்தார் பூமி ஆள்வார்.&lt;br /&gt;பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.&lt;br /&gt;பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.&lt;br /&gt;போ&lt;br /&gt;&lt;br /&gt;போகும்போது புளியமரத்தடியில் போ&lt;br /&gt;வரும்போது வேப்பமரத்தடியல் வா.&lt;br /&gt;ந&lt;br /&gt;&lt;br /&gt;நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.&lt;br /&gt;நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.&lt;br /&gt;நன்றி மறவேல்.&lt;br /&gt;நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.&lt;br /&gt;நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.&lt;br /&gt;நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.&lt;br /&gt;நன்மைக்கு நன்மை செய்&lt;br /&gt;தீமைக்கு நன்மையே செய்&lt;br /&gt;நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்&lt;br /&gt;நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.&lt;br /&gt;நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.&lt;br /&gt;நா&lt;br /&gt;&lt;br /&gt;நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை&lt;br /&gt;நாளை என்பது நட்டாற்று ஓடம்.&lt;br /&gt;நாளை என்று ஒருநாள் உண்டா?&lt;br /&gt;நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.&lt;br /&gt;நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.&lt;br /&gt;நாளும் அதிகாலையில் நீராடு.&lt;br /&gt;நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?&lt;br /&gt;நி&lt;br /&gt;&lt;br /&gt;நிலையாமை ஒன்றே நிலையானது.&lt;br /&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;நீலிக்கு கண்ணீர் இமையிலே.&lt;br /&gt;நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.&lt;br /&gt;நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.&lt;br /&gt;நெ&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.&lt;br /&gt;நெருப்பென்றால் வாய் வந்து விடாது.&lt;br /&gt;நொ&lt;br /&gt;&lt;br /&gt;நொறுங்கத் தின்றால் நூறு வயது.&lt;br /&gt;நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.&lt;br /&gt;நோ&lt;br /&gt;&lt;br /&gt;நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.&lt;br /&gt;ம&lt;br /&gt;&lt;br /&gt;மனம் போல வாழ்வு&lt;br /&gt;மனம் ஒரு குரங்கு&lt;br /&gt;மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி&lt;br /&gt;மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.&lt;br /&gt;மனைவி வீட்டின் ஆபரணம்.&lt;br /&gt;மனைவி சொல்லே மந்திரம்.&lt;br /&gt;மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்&lt;br /&gt;மனித நேயம் வளர்ப்பதே மதம்.&lt;br /&gt;மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.&lt;br /&gt;மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.&lt;br /&gt;மதியாதார் வாசல் மிதியாதே!&lt;br /&gt;மனசாட்சியை ஏமாற்றாதே!&lt;br /&gt;மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.&lt;br /&gt;மந்திரம் கால்; மதி முக்கால்.&lt;br /&gt;மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.&lt;br /&gt;மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.&lt;br /&gt;மனிதனின் அழகு அவன் நாக்கு.&lt;br /&gt;மா&lt;br /&gt;&lt;br /&gt;மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.&lt;br /&gt;மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!&lt;br /&gt;மாசி பங்குனியில் கரும்பு ஆறு!&lt;br /&gt;மாதா, பிதா, குரு, தெய்வம்.&lt;br /&gt;மி&lt;br /&gt;&lt;br /&gt;மின்னுவதெல்லாம் பொன்னல்ல&lt;br /&gt;மீ&lt;br /&gt;&lt;br /&gt;மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?&lt;br /&gt;மு&lt;br /&gt;&lt;br /&gt;முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.&lt;br /&gt;முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு&lt;br /&gt;முன் வைத்த காலை பின் வைக்காதே!&lt;br /&gt;முயன்றால் முடியாதது இல்லை.&lt;br /&gt;முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.&lt;br /&gt;முயற்சி திருவினையாக்கும்.&lt;br /&gt;மூ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.&lt;br /&gt;மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.&lt;br /&gt;மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.&lt;br /&gt;மை&lt;br /&gt;&lt;br /&gt;மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!&lt;br /&gt;வ&lt;br /&gt;&lt;br /&gt;வட்டியோடு முதலும் போச்சு.&lt;br /&gt;வளைகிற முள் நுழையாது.&lt;br /&gt;வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.&lt;br /&gt;வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.&lt;br /&gt;வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.&lt;br /&gt;வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.&lt;br /&gt;வண்டி வந்தால் வழி உண்டாகும்.&lt;br /&gt;வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.&lt;br /&gt;வா&lt;br /&gt;&lt;br /&gt;வாய் உள்ளவன் உள்ளே.&lt;br /&gt;வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!&lt;br /&gt;வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.&lt;br /&gt;வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.&lt;br /&gt;வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.&lt;br /&gt;வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.&lt;br /&gt;வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.&lt;br /&gt;கடந்த காலம் ஒரு கனவு&lt;br /&gt;வருங்காலம் ஒரு பெருமூச்சு&lt;br /&gt;வாய் அரை வைத்தியன்.&lt;br /&gt;வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்&lt;br /&gt;வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.&lt;br /&gt;வி&lt;br /&gt;&lt;br /&gt;வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்&lt;br /&gt;விரலுக்கேற்ற வீக்கம்.&lt;br /&gt;விளையும் பயிர் முளையிலே தெரியும்&lt;br /&gt;வீ&lt;br /&gt;&lt;br /&gt;வீணை கோணினும் நாதம் கோணுமா?&lt;br /&gt;வெ&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.&lt;br /&gt;வே&lt;br /&gt;&lt;br /&gt;வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டுவரும்&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-72885455159391140?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/72885455159391140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/72885455159391140'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/02/blog-post_6713.html' title='தமிழ்நாட்டுப் பழமொழிகள்'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-3717547052017864599</id><published>2011-02-19T04:58:00.001-08:00</published><updated>2011-02-19T04:58:51.086-08:00</updated><title type='text'>எகிப்து மக்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="article-content"&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://www.tmmk.in/images/stories/2011/e1.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எகிப்தில் ஏற்பட்ட 17 நாள் புரட்சி 30  ஆண்டுகால சர்வாதிகாரியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது. அது மட்டும்  இன்றி நைல் நதிக்கரையில் இருந்து மக்கள் புரட்சியின் செய்திகளைக் கண்ட  உலகம் குறிப்பாக அரபகம்&amp;nbsp; மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. இந்த பூமியில்  முதன்முதலாக நாகரீகம் கற்றுக்கொடுத்த&amp;nbsp; நைல் சமவெளிப் புரட்சியின் மூலம்  புதிய இலக்கணத்தை பூவுலகுக்கு கற்றுக்கொடுத்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2011 பிப்ரவரி 11ஆம் தேதி, உலக சரித்திரப் பக்கங்களில் நிரந்தர  இடத்தைப் பிடித்தது. இஸ்லாமிய வரலாற்றில், நீங்காஇடம் பெற்ற வீரத்தியாகி  ஹசனுல்&amp;nbsp; பன்னா அவர்கள் உயிர்த்தியாகம் செய்த 12&amp;amp;ம் தேதி எகிப்து,  அன்னாரின் தியாகத்தின் பலனை கண்ணாற்கண்டது. மாலை நேர தொழுகைக்குப் பிறகு  சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கின் நீண்டகால விசுவாசியான உமர் சுலைமானின்  தொலைக்காட்சி அறிவிப்பு சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டதை உறுதி&amp;nbsp; செய்தது.  முப்பது வினாடிகளுக்கும் குறைவாகவே அவரின் அறிவிப்பு அமைந்திருந்தது.  முப்பது ஆண்டுகாலம் அந்த நாட்டை கட்டி ஆண்ட ஒரு சர்வாதிகாரி வீழ்ந்த சேதியை  முப்பது வினாடிக்கும் குறைவான நேரத்திற்குள் அறிவித்த விநோதத்தை  என்னவென்று சொல்வது? எல்லா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியும் இவ்வாறு தான்  அமையுமோ ?&lt;br /&gt;&lt;br /&gt;1981 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் அன்வர் சாதாத்  கொல்லப்பட்டார். அன்று துணை அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் அதிபரானார்.  2011 பிப்ரவரி 10ஆம் தேதி முபாரக்கின் குடும்பத்தினர் பத்திரமாக எகிப்தின்  செங்கடல் கரையோர சுற்றுலா நகரான ஷரம்&amp;nbsp; அல்ஷேக் நகருக்கு இடம் பெயர்ந்தனர்.  சர்வ பலம் பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு இருந்தும் என்ன பயன்? படைபலம்  மிக்க இஸ்ரேல் உற்ற துணையாகஇருந்தும் என்ன பலன்? மக்கள் எழுச்சி ஏற்பட்டு  விட்டதென்றால் இரவோடு இரவாக ஓடவேண்டியது தான். ஹோஸ்னி முபாரக் என்ற  அரபுலக சர்வாதிகாரியின் ஆட்சிக்கு தஹ்ரீர் என்ற சுதந்திர சதுக்கத்தில்  முடிவுரை எழுதப்பட்டு விட்டது.&lt;br /&gt;2009 ஜூன் நான்காம் தேதி அமெரிக்க அதிபர்  பராக் ஹுசைன் ஒபாமா, எகிப்து தலைநகர் கெய்ரோவில்&amp;nbsp; இஸ்லாமிய உலகத்திற்கும்  அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை புதிய தொடக்கமாக்குவோம் என அழைப்பு  விடுத்திருந்தார் அல்லவா! அந்த தொடக்கம் எந்த தொடக்கம் என்பதை எகிப்து  விடுதலைப் போராளிகள் ஒபாமாவுக்கு உணர்த்தியுள்ளதாகவே உலகம் கருதுகிறது.  மக்கள் எழுச்சிக்கு முன்னால் சாம்ராஜ்யம் சரியும் காட்சியை உலகம் கண்  முன்னால் கண்டது. இறைவன் மிகப்பெரியவன் என முழங்கிய தஹ்ரீர் சதுக்கப்  போராளிகள்&amp;nbsp; இந்தப் புரட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளை வாழ்த்தி  முழங்கினர். எந்த சர்வாதிகாரியின் முடிவும் இனி அதிரடியாகவே முடியும்;  அதோ&amp;nbsp; கதியில் முடியும் என போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான மஹ்மூத்  எல்ஹேத்தா அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து இப்போது விடுதலைக் காற்றை  சுவாசிக்கிறது என அறுபது வயதான சப்வான் அபூசாத் தெரிவித்தார். செப்டம்பர்  11, பிப்ரவரி 11&amp;nbsp; ஆகிய தேதிகள் 30 ஆண்டுகால வரலாற்றில் முக்கியத்துவம்  பெற்றவையாகத் திகழ்கின்றன.&amp;nbsp; 1990 செப்டம் பர் 11 ஆம்தேதி நெல்சன் மண்டேலா  சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பிப்ரவரி 11 ஈரானில் எழுந்த  புரட்சிக்கு குமைனி தலைமை தாங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னெழுச்சியாக எகிப்து  புரட்சி நடைபெற் றதாகக் கூறப்பட்டாலும், இதில் கொள்கை ரீதியான ஒரு படை&amp;nbsp;  முக்கியப் பங்கு வகித்தது. ஆம் இஹ்வான்கள் எகிப்தின் மீள் கட்டமைப்புக்கு  முக்கியப் பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1928ஆம் ஆண்டு  ஆறு கொள்கைப் போராளிகளுடன் சூயஸ் நகரில் தொடங்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு  10 லட்சம் இஹ்வான்கள் எகிப்து முழுவதும் உருவானார்கள். இலட்சியத்திற்காக  எழுந்த அந்தத் தூய இயக்கம் அரபுலகின் தவப்புதல்வன் என்று தன்னைத் தானே  வர்ணித்துக்கொண்ட கமால் அப்துல்நாசர் மற்றும் அவரது பின்னோடிகளான அன்வர்  சாதாத் மற்றும் ஹோஸ்னி முபாரக் உள்ளிட்ட ஆட்சியாளர்களால் தடை  செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற எகிப்து நாடாளுமன்றத் தேர்தலில் 222  தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 சதவீத தொகுதிகளைக் கைப்பற்றினர்  இஹ்வான்கள்.&lt;br /&gt;&lt;img border="0" src="http://www.tmmk.in/images/stories/2011/e2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;88 தொகுதிகளை வென்ற இஹ்வான்கள்  அரசியலில் முக்கிய இடத்தினைப் பெற்றாலும் சுயேச்சை யாகப் போட்டியிட்டனர்.  சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகின்றனர். அடுத்து எகிப்தில் எடுக்கப்பட  வேண்டிய முக்கிய நகர்வுகளில் இவர்களது பங்கு பிரதானமாக இருக்கும் என  கருதப்படுகிறது. இன்று துணை அதிபராக இருக்கும் உமர் சுலைமான் எகிப்தின்  முன்னாள் உளவுத்துறை தலை வராகவும் சிஐஏவின் தரகராகவும் பணியாற்றியுள்ளார்.  குறிப்பாக எகிப்தில் களமாடிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை நாடு கடத்திய  சேவையை செய்துள்ளார். சிறைவாசிகளை சித்திரவதைகள் செய்வதில் மிகவும்  தேர்ந்தவராக விளங்கினார். அவர் ஒவ்வொரு நாளும் இஸ்ரேலுடன் தனி  தொலைபேசியில் உரையாடும் வழக்க முடையவர் என விக்கி லீக் அம்பலப்படுத்தியது  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறே ராணுவத்தின் செயல்பாடுகள்  குறித்து முழுமையாக முடிவுக்கு வரமுடியாது. தஹ்ரீர் சதுக்கத்தில் கூட்டம்  கூடுவதைத் தடுக்க முற்படுவது, தேர்தல் ஆறு மாதம் கழித்து என அறிவித்துள்ளது  போன்றவை சந்தேகத்தை வரவழைத்தாலும் ஹோஸ்னி முபாரக்கை அகற்றிய மக்களுக்கு  இவர்கள் ஒரு பொருட்டாக கருதப்பட மாட்டாது என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தஹ்ரீர்  சதுக்கம் எழுப்பிய வினாக்களுக்கு அரபகம் நாளை என்ன பதில் கூறப்போகிறது?&amp;nbsp;  இந்தப் புரட்சி தங்களுக்கு ஒரு உத்வேகத்தை தந்துள்ளதாக அமெரிக்க அதிபர்  ஒபாமா அறிவித்திருக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஹோஸ்னி  முபாரக்கிற்கு&amp;nbsp; ஆதரவாகப் பேசிய சவூதி அரேபியா இன்று புரட்சியாளர்களுக்கு  வாழ்த்து தெரிவித்துள் ளது. அல்ஜீரியா மற்றும் ஏமன் மக்கள் திரள்  போராட்டத்தின் மூலம் தன்னை நிரூபிக்கத் துடிக்கிறது. உலகமே உன்னிப்புடன்  பார்க்கும் இந்தப் புரட்சியில் பல்வேறு முக்கிய அம்சங்களும் படிப்பினைகளும்  உள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. ஹோஸ்னி முபாரக் மட்டுமே எகிப்தின்  முழுமையான வில்லன் என சித்தரிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹசனுல்  பன்னா, செய்யது குத்துப் போன்றவர்களின் உயிரைக்குடித்த சர்வாதிகார சக்தி  களான நாசர், அன்வர் சாதாத் போன்றவர்களை மறக்க முடியாது. அன்னை ஜைனப் அல்  கஜ்ஜாலி போன்றவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய அந்தக் கொடூர  ஆட்சிகளை அகற்றிவிட்ட&amp;nbsp; எகிப்து உண்மையான விடுதலையை அனு பவிக்க கொஞ்சம்  காத்திருக்க வேண்டியதிருக்கும். அரபகத்தில் பல நாடுகளுக்கு சுதந்திர உணர்வை  எகிப்து புரட்சி வழங்கி இருப்பினும் இந்தப் புரட்சிதான் நாளை சுதந்திர  பாலஸ் தீனம் உருவாக முக்கியக் காரணியாக இருக்கும் என கருதப்படுகிறது.  இன்றைய&amp;nbsp; எகிப்து புரட்சியை வாழ்த் தும் அதேவேளையில் சுதந்திர பாலஸ்  தீனத்தினை வரவேற்கத் தயாராவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எகிப்து மக்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://www.tmmk.in/images/stories/2011/e3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அமெரிக்காவும், இஸ்ரேலும் தலையிடாத அரபுலகம்! அஹ்மதிநிஜாத் விருப்பம்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;‘எத்தனை தந்திரங்களை  ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினாலும்,&amp;nbsp; மக்கள் எழுச்சியின்&amp;nbsp; வாயிலாக  அமெரிக்காவும் இஸ்ரேலும் அற்ற அரபுலகை உருவாக் கலாம் என்பதை உங்களால்  உறுதிப்படுத்த முடியும்‘... ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் 32-வது  ஆண்டினையொட்டி&amp;nbsp; டெஹ்ரானின் ஆசாத்(சுதந்திர) சதுக்கத்தில் நடந்த பேரணியில்  உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இப்பிராந்தியத்தில்  எகிப்து மற்றும் துனீசியாவின் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக்  கூடாது. ஆப்கானில் இவர்கள் என்ன செய்தார்கள்? இப்பிராந்தியத்தில் ஏன்  இவர்கள் ராணுவ தளங்களை அமைக்கின்றார்கள்?’ மஹ்மூத் அஹ்மத் நிஜாத் வினா  விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாடுகள் என்று கூறும் பொழுதே இஸ்ரேலின் மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா செயல்படுவதாக நிஜாத் குற்றஞ்சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்திய  புரட்சியை வாழ்த்தியநிஜாத், உஷாராக இருக்குமாறு எகிப்து மக்களை  கேட்டுக்கொண்டார். சுதந்திரத்தை வென்றது உங்களுடைய உரிமையாகும். உங்களை  ஆளப்போவது யார் என்பதை உறுதி செய்வது நீங்கள் மட்டுமே என்றும் அவர்  தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;-அபுசாலிஹ்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-3717547052017864599?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/3717547052017864599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/3717547052017864599'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/02/blog-post_455.html' title='எகிப்து மக்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்...!'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6675527885901885886.post-7937297462079277910</id><published>2011-02-16T07:45:00.000-08:00</published><updated>2011-02-16T07:45:29.224-08:00</updated><title type='text'>மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7Yv_jRva1W8/TVvxATaYD5I/AAAAAAAAABk/3MRPilbk9M4/s1600/egyth-.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="112" src="http://4.bp.blogspot.com/-7Yv_jRva1W8/TVvxATaYD5I/AAAAAAAAABk/3MRPilbk9M4/s320/egyth-.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எகிப்தின் மக்கள் புரட்சி அடுத்த கட்டத்தை  நோக்கி நகர தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இங்கு ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத் தின்  பிடியில்&amp;nbsp; இஸ்ரேல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக உரிமைகள்  அடக்கப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்ட ஒரு&amp;nbsp; இஸ்லாமிய சக்திக்கு நாட்டின்  கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும், என இஹ்வான்களை பெயர் குறிப்  பிடாமல்கூறியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. ஈரானில்  அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான்நிகழ்ந்தது&amp;nbsp; என ஜெர்மனி  அதிபர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய ஒருங்கிணைந்த செய்தியாளர் கூட்டத்தில்  அவர் தெரிவித்தார்.    &lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் நெருங்கிய நண்பன் ஹோஸ்னி முபாரக் மடக்கப்படுவதை இஸ்ரேல்  கவலையுடன் பார்க்கிறது ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை  எடுக்கவேண்டாம் என இஸ்ரேல் அமெரிக்காவிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும்  கெஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியை விட்டு  விரட்டுவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருக்கும்  லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் தார்மீக  ஆதரவினையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து நாட்டில்  சர்வாதிகாரி ஹோஸ்னிக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி இரண்டு வாரம்  கழிந்தபிறகும் வாய்திறக் காமல் மௌனம் காத்த துருக்கி பிரதமர் ரஜப்  தய்யிப்ஏற்தொகன் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது முழு ஆதரவை  தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும்  நிலைப்பெற வேண்டு மானால் மக்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென  நாடாளு மன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து  அமைதியான வழியில் மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர்  அறிவித்துள் ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த  வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க  வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில்  சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனதுமுழு&amp;nbsp;  ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில்ஜனநாயக உரிமைக்காக போராடக் கூடியவர்களுடன்  நாங்கள் என்றும்&amp;nbsp; இருப்போம்என்றும் பாரம்பரிய இஸ்லாமிய&amp;nbsp; மாண்புகள் கொண்ட.  மகத்தான நாடான எகிப்தின்&amp;nbsp; புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை  பகிரங்கமாகதெரிவிப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர்  ஸாலிஹி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தின் புரட்சி இஸ்லாமியபாரம்பரிய  மத்திய கிழக்கு உருவாக உதவும் என தாங்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஈரான்  தெரிவித்தது. அதேவேளையில் உலகை அதிரவைத்துள்ள புரட்சிப் போராட்டத்தில்  அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாக இரான்வன்மையாக குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா  பிராந்தியத்தில்எழுச்சி மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சிகள்  தூக்கி எறியப்படவேண்டும் மேற்கத்திய சக்திகளின்அடி வருடி அரசுகள்  கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதைத்தான் தற்போதைய மக்கள் புரட்சிகள்  நிரூபித்துள்ளதாக இரான் கூறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது எகிப்தின்  வீதிகளில் நடைபெறும் மக்கள் புரட்சி திடீரென உருவானது அல்ல.நாட்டிற்கு  நன்மைகளை நாடியவர்கள்&amp;nbsp; ஹோஸ்னி முபாரக்கை பலமுறை இடித்துரைத்து  எச்சரித்தும், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்கஹோஸ்னி பாரக்  மறுத்ததினால். இப்போது அவரது ஆட்டத்திற்கான இறுதி தீர்ப்பு தீட்டப்பட்டு  வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் முஸ்லிம் சிந்தனாவாதிகள் அதிகாரத்தை  கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில், எகிப்தில் மேற்குலகின் ஆசி பெற்ற  பொம்மை ஆட்சியை கொண்டு வர முயற்சி நடைபெறலாம்&amp;nbsp; என்ற தகவல்கள் வெளிவந்த  நிலையில், முன் யோசனையில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில்  இஹ்வான்கள் முன் யோசனையுடன் மிக சாதுர்யத்துடன் காய்களை  நகர்த்திவருகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த இஹ்வானுல்  முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக  உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும்  எனக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தலை  அசைக்கும் ஹோஸ்னி&amp;nbsp; முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்? என்பது  குறித்த அச்சத்தின் உச்சத்தில்&amp;nbsp; அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;காஸாவிலிருந்து  எகிப்தில் நடைபெறும் போராட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர்வேறு வேறு  தோற்றங்களில் கலந்துகொள்கின்றனர் என்ற பரப்புரையும் மிக தீவிரமாக  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,  ஹோஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமை&amp;nbsp;  குறித்த கவலையினால் அல்ல! மாறாக, 82 வயதான பிறகு ஏன் பதவியில் தொடர  வேண்டும், வேறொரு இளம் அடிமையிடம்&amp;nbsp; ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே என்ற  எரிச்சலே முக்கியக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்திய  பாதுகாப்பு படையில்&amp;nbsp; இஸ்லாமிய சிந்தனாவாதிகளுக்கு அதிக செல்வாக்கு  இருப்பதாக கருதப்படுகிறது. என்னவாயினும், இதுவரை ஹோஸ்னி முபாரக்கிற்கு  ஆதரவை தெரிவித்த பாதுகாப்புப் படையினர் தற்போது போராட்டக்காரர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்த மறுக்கின்றனர். அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை  உறுதி செய்துவிட்டு ஹோஸ்னி முபாரக் நாட்டைவிட்டு வெளியேறு என ராணுவம்  மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதா ஆன்லைன் இண்டலிஜன்ஸ் மாத இதழான  ஸ்ட்ராட் ஃபோர் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்தது போல ராணுவம் தங்களுடன் இணையும் என போராளிகள் கருதுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;சர்வாதிகாரிக்கு  ஆதரவாக களம் இறங்கும் அமெரிக்க போர் விமானங் கள் எகிப்தின் சினாய் தீவில்  சர்வாதிகார சக்திகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க  விமானப்படை அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது உரிமை போராட்டக்காரர்களுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையுமேற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித் துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில்  குவியும் இஸ்ரேல் ஆயுதங்கள் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது  கொடும் தாக்குதல் நடத்த அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை  இஸ்ரேல் வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச  அளவில் தடைச் செய்யப் பட்டுள்ளஅதிநவீன நாசகார ஆயுதங்கள் எகிப்திற்கு  வந்துள்ளன. மக்கள்&amp;nbsp; போராட்டத்தை பூண்டோடு அழிக்க முனையும் முக்கிய சதியாக  இது கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் மக்கள் புரட்சிகள் தோற்றதாக  சரித்திரம் இல்லை .மத்திய கிழக்கு நாளை உரிமை மீட்பு போராட்டத்தின்  முன்னோடி பிராந்தியமாக மாறப்போகிறது. ஆம் வரலாறு காத்திருக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;-ஹபிபா பாலன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6675527885901885886-7937297462079277910?l=ahmh.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/7937297462079277910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6675527885901885886/posts/default/7937297462079277910'/><link rel='alternate' type='text/html' href='http://ahmh.blogspot.com/2011/02/blog-post.html' title='மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!'/><author><name>Nagore.AHM.Hameed</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_I30RvX5lnmg/TOVDFbEPskI/AAAAAAAAAAQ/DpYpP2QWGaw/S220/26997_110055039010964_100000194061471_257814_7776294_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7Yv_jRva1W8/TVvxATaYD5I/AAAAAAAAABk/3MRPilbk9M4/s72-c/egyth-.jpg' height='72' width='72'/></entry></feed>
